search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்"

    துடியலூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்:

    கோவை கணுவாய் நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட சோமையனூர் அருகே உள்ள திருவள்ளூவர் நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 50 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் வரவில்லை.

    இது குறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் காலிக்குடங்களுடன் இன்று காலை கோவை- ஆனைகட்டி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

    இந்த தகவல் கிடைத்ததும் தடாகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரியில் இன்று காலை குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    ராயக்கோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம் நாகமங்கலம் ஊராட்சி நீலகிரி கிராமத்தில் சுமார் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 1 வாரமாக குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் இன்று காலை காலி குடங்களுடன் ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலை நாகமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    இது குறித்து தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் உமா மகேஸ்வரி, உத்தனப்பள்ளி சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சு நாதன், ஊராட்சி செயலாளர் சையத் பாஷா ஆகியோர் வந்தனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். பின்னர் சாலைமறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாகல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பட்டகப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் நகராட்சி சார்பில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. சில நேரங்களில் பஞ்சாயத்து சார்பில் நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதமாக சரிவர தண்ணீர் விநியோகம் செய்யவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் அப்பகுதியைச் சேர்ந்தவர் கள் பலமுறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.  இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பட்டகப்பட்டிக்கு திரண்டு வந்து இன்று காலை சாலை  மறியலில் ஈடுபட்டனர். 

    இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சி செயலர் திருவருட்செல்வன் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    பென்னாகரம் அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த கெண்டைய அள்ளி ஊராட்சிக்குப்பட்ட காவக்காடு கிராமத்தில் சுமார் 300 குடியிருப்புகள் உள்ளனர். இந்த பகுதியில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வரவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமம் அடைந்து அவதிப்பட்டு வந்தனர். மேலும் தேவைக்கு அருகில் உள்ள கிராமத்தில் இருந்து குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் முறையாக குடிநீர் வழங்ககோரி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் இது வரைக்கும் குடிநீர் கிடைக்க எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் காலி குடங்களுடன் இன்று காலை 9 மணிக்கு ஒன்று திரண்டு பென்னாகரம்-மேச்சேரி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசாரும், பென்னாகரம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விமலன், கிராமநிர்வாக அலுவலர் சுகுமார், ஆர்.ஐ. மாலா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது  அதிகாரிகள் குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதன் பின்னர் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் சில பகுதிகளில் குடிநீர் பிரச்சினை தீராத தொடராக நீண்டு கொண்டே செல்கிறது. தண்ணீர் கேட்டு பொதுமக்களும் போராடி வருகின்றனர். இருந்த போதிலும் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் தஞ்சை சூரக்கோட்டை ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 2 மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ளது. இதில் இருந்து தான் இந்த பகுதிக்கு குடிநீர் சென்றது.

    இதைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக நீர்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீர் முற்றிலுமாக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதிக்கு குடிநீர் தட்டுபாடு நிலவியது. அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் இப்பகுதி மக்கள் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

    இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் சென்று மனு அளித்தனர். அப்போது அவர்கள் விரைவில் தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்றனர். ஆனால் இன்று வரை அதற்கான எந்த நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் ஈடுபடவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த இப்பகுதி மக்கள் இன்று காலை தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் காலிகுடங்களுடன் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இது குறித்து தஞ்சை தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசாரும், அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறியதன் பேரில் பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    பொதுமக்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    திருக்குவளை அருகே குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் சாலை மறியல் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

    கீழ்வேளூர்:

    நாகை மாவட்டம், கீழையூர் ஒன்றியம், திருக்குவளை அருகே உள்ள மேலவாக்கரையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த பகுதியில் உள்ள மக்கள் அங்குள்ள போர்வெல் மூலமாக குடிநீர் பெற்று பயன்படுத்தி வந்தனர். தற்போது போர்வெல் பழுது ஏற்பட்டதாலும், நிலத்தடி நீர் குறைந்து விட்டதாலும், சுமார் 2 மாதமாக அந்த பகுதிக்கு குடிநீர் வரவில்லை. இதனால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் பக்கத்து ஊருக்கு சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வந்தனர்.

    குடிநீர் பற்றாக்குறை குறித்து பல முறை அதிகாரிகளிடம் அந்த பகுதியில் உள்ளவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் மேலவாக்கரை மெயின் ரோட்டில் இன்று காலை காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுப்பட்டனர். 

    தகவலறிந்து அங்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி மற்றும் திருக்குவளை போலீசார் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 1 வாரத்திற்குள் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர்.

    இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×